உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.29 லட்சம் நிதி வழங்கிய போலீசார்


உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.29 லட்சம் நிதி வழங்கிய போலீசார்
x

உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.29 லட்சம் நிதியை போலீசார் வழங்கினர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் கலைச்செல்வன். இவர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு சுபாசினி என்ற மனைவியும், யாழினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏட்டு கலைச்செல்வனுடன் கடந்த 2003-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அனைத்து மாவட்ட போலீசாரும் இணைந்து திரட்டிய ரூ.29 லட்சத்து 3 ஆயிரத்து 500 நிதியை, அவரது குடும்பத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிதி, ஏட்டுகள் செந்தில்குமார், பால்பாண்டியன், ஸ்டாலின் சகாயராஜ், பழனிச்சாமி, வசந்த் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட உதவும் கரங்கள் பொறுப்பாளர்கள் மூலமாக கலைச்செல்வன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.


Next Story