தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு


தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு
x

தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் பூவன், கற்பூரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் வாழைத்தார்களை பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி கடந்தவாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், ரஸ்தாலி ரூ.250-க்கு விற்றது ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கு விற்றது ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கு விற்றது ரூ.400-க்கும், மொந்தன் ரூ.300-க்கு விற்றது ரூ.500-க்கும் விற்பனையானது. தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story