பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை‌ உயர்வு


பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை‌ உயர்வு
x

பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை‌ உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த ஏல சந்தைக்கு வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும் ஏலம் போனது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,200-க்கும், சம்பங்கி கிலோ ரூ100-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும் முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும் ஏலம் போனது. பணிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூக்கள் விலை‌ உயர்ந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story