பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அமாவாசையை யொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு:- கடந்த வாரம் ரூ.300-க்கு விற்ற ஒரு கிலோ குண்டு மல்லி தற்போது ரூ.700-க்கும், ரூ.70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ ரூ.180-க்கும், ரூ.70-க்கு விற்ற அரளி பூ ரூ.170-க்கும் ரூ.80-க்கு விற்ற சாமந்தி பூ ரூ.170-க்கும், ரூ.350-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும் விற்பனையானது. ரூபாய்க்கும் விற்பனையானது.


Next Story