நெல்லையில் பூக்கள் விலை உயர்வு


நெல்லையில் பூக்கள் விலை உயர்வு
x

சரஸ்வதி பூஜையையொட்டி நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பூக்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை உள்ளிட்ட காலக்கட்டங்களில் பூ தேவைப்பாடு அதிகரிப்பதால் விலையும் உயரும்.

நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதால் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

மல்லிகை ரூ.1,500

ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1500-க்கும், பிச்சிப்பூ ரூ.1200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

ரோஜாப்பூ ரூ.300-க்கும், கேந்தி ரூ.100-க்கும், கோழிப்பூ ரூ.110-க்கும், வாடாமல்லி ரூ.70-க்கும் விற்கப்பட்டது.

ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளி மற்றும் நந்தியாவட்டம் மொட்டு கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.400-க்கு விற்பனையானது.

பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story