வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் நாசம்


வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் நாசம்
x

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் நாசமானது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு தென்றல் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 46). இவர்களுக்கு கமலேஷ் (15) என்ற ஒரு மகன் உள்ளான். கொளஞ்சிநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கஸ்தூரி தனது மகனுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு கஸ்தூரியும், அவரது மகனும் தென்றல் நகர் 2-வது தெருவில், கஸ்தூரியின் அக்காள் தனலட்சுமியின் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கஸ்தூரியின் தந்தை ரெங்கசாமியை பார்க்க சென்றனர். அப்போது கஸ்தூரியின் ஓட்டு வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டவர்கள் இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஓட்டு வீட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து நாசமாயின. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story