இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்


இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்
x

இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்துல்கனி பேசினார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்


பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கபிஸ்தலத்தில் நடைபெற்றது. முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-குழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே தங்களுக்கு ஏற்பட்டுள்ள குற்றம் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்கிறார்கள். எனவே பெற்றோர்கள், தங்களது குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

இலவச சட்ட உதவி மையம்

சட்டஉதவி தேவைப்படும் நபர்கள் தயங்காமல் கோர்ட்டை நாடலாம். ஏழை- பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் அனைத்து கோர்ட்டுகளிலும் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. வழக்கை நடத்த முடியாதவர்கள் வக்கீலை நியமித்து நீதி பெறலாம். அதற்கான வக்கீல் ஊதியத்தை அரசே வழங்குகிறது.

குடும்ப பிரச்சினைகளுக்கு கோர்ட்டில் செயல்படும் சமரச மையத்தை அணுகி தீர்வு காணலாம். இலவச சட்ட உதவி மையத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.





Next Story