பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் அனுப்பன்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மேட்டமலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சாத்தூர் மேலக்காந்தி நகரை சேர்ந்த பரமசிவம் (25) தான் ரவுடி என்று கூறி அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் பரமசிவத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story