ஆடுகள் திருடு போனதை தட்டிக்கேட்ட விவசாயியை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது பண்ருட்டி அருகே பரபரப்பு


ஆடுகள் திருடு போனதை தட்டிக்கேட்ட      விவசாயியை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது         பண்ருட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:45 PM GMT)

பண்ருட்டி அருகே ஆடுகள் திருடு போனதை தட்டிக்கேட்ட விவசாயியை தாக்கி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

பண்ருட்டி,

விவசாயி

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்மோகன்(வயது 47). விவசாயியான இவர் தான் வளர்த்து வந்த ஆடுகளில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போய்விட்டது.

இதையடுத்து ராஜ்மோகன் சந்தேகத்தின் பேரில் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவில் வசித்து வரும் பெருமாள் மகனும், ரவடியுமான அசோக்குமார்(24) என்பவரின் வீட்டிற்கு சென்று ஆடுகள் திருடு போனது குறித்து அவரிடம் விசாரித்தார்.

பீர்பாட்டிலால் குத்த முயற்சி

இதில் ஆத்திரம் அடைந்த அசோக்குமார், ராஜ்மோகனை அசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட ராஜ்மோகன் உடனே விலகி கொண்டதால் உயிர் தப்பினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அசோக்குமார், ராஜ்மோகனின் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1020-ஐ பறித்துக்கொண்டு அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story