தனியார் நிறுவன ஊழியர் கொலையில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


தனியார் நிறுவன ஊழியர் கொலையில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாயாண்டி கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுடலைமணி (22), மணிகண்டன் (21) ஆகியோர் திருப்பூர் தாராபுரம் போலீசில் சரண் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் திருப்பூர் சென்று 3 பேரையும் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மாயாண்டி கொலை வழக்கில் கண்ணனின் உறவினர்கள் உள்பட 3 பேரை சேர்க்க வேண்டும், மேல நத்தத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க அவர்கள் மறுத்துள்ளனர். நேற்றும் 2-வது நாளாக அவர்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.


Next Story