தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 29). இவர், சாத்தனூரில் உள்ள மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பரானா (20). இவர், திருவண்ணாமலை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் அங்கிருந்து சென்றனர்.


Next Story