திடீரென பெயர்ந்து விழுந்த‌ நூலக மேற்கூரை - அதிர்ஷ்டவசமாக தப்பிய நூலகர்


x

ஊராட்சி நூலக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே மயிலம் அருகே ஊராட்சி நூலக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிராபுலியூர் ஊராட்சியில் ஊர்ப்புற நூலகம் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழுதடைந்து காணப்பட்டு வந்த கட்ட‌டத்தில் நூலகர் சென்ற போது, திடீரென மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

அதிர்ஷ்டவசமாக நூலகர் காயமின்றி தப்பினார். 2 மாதங்களுக்கு முன்பும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. எனவே புதிய கட்ட‌டம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story