டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
சேலம்
ஏற்காடு:-
ஏற்காட்டில் உள்ள போட்டு காடு கிராமம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை நேற்று மதியம் 12 மணி அளவில் திறந்தபோது 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்துவிட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மீண்டும் கடையை மூடிவிட்டு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் வந்ததும் கடை திறக்கப்பட்டது. அப்போது பாம்பு கடையினுள் அடுக்கி வைத்திருந்த மது பெட்டிகள் இடையே சிக்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த வனத்துறையினர் கோவில் மேடு பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் உதவியுடன் மதியம் 1.30 மணி அளவில் பாம்பை பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் பாம்பை சன்னியாசி காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story