வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்


வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்
x

ஆலங்குடி அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம் அடைந்தது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story