வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்

ஆலங்குடி அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம் அடைந்தது.
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





