தக்கலை அருகே வாலிபர் 'திடீர்' சாவு


தக்கலை அருகே வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM GMT (Updated: 23 Oct 2022 6:45 PM GMT)

தக்கலை அருகே வாலிபர் திடீரென இறந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம், பாண்டிவிளையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் வினோ (வயது39), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அதிகாலை 2.30 மணிக்கு ஏதோ ஒரு விஷ ஜந்து கடித்ததாக தெரிகிறது. இதனால் கண்விழித்த அவர் இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். உடனே தாயார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருமாறு அழைத்தார். ஆனால், அவர் விடிந்ததும் காலையில் செல்லலாம் என கூறியதாக தெரிகிறது.

சிறிது நேரம் கடந்து வினோ திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் வினோவை கடித்த விஷ ஜந்து எது என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story