வாலிபர் திடீர் சாவு

நெல்லை அருகே வாலிபர் ஒருவர் திடீரென இறந்தார்.
தாழையூத்து:
நெல்லையை அடுத்த தாழையூத்து காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சிவன் பாண்டியன். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவசங்கரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





