கஞ்சா கடத்திய வாலிபர் கைது
காவேரிப்பட்டணத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் போலீசார் குரும்பட்டி மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் (வயது22) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire