ஆடு, கோழி திருடிய வாலிபர் கைது


ஆடு, கோழி திருடிய வாலிபர் கைது
x

மோகனூர் அருகே ஆடு, கோழி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அரூர் ஊராட்சி ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44). விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 31-ந் தேதி இரவு வழக்கம்போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் அதிகாலையில் வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியில் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆட்டை திருட முயன்றனர். அதை பார்த்த ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பிய ஓடிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் மோகனூர் அருகே உள்ள மணியங்காளியப்பட்டி, பெரியார் நகரை சேர்ந்த ரங்கசாமி மகன் லோகேஷ் என்கின்ற யோகேஸ்வரன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு திருட்டு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. பின்னர் யோகேஸ்வரனை கைது செய்து மோகனூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story