வாலிபரை தாக்கி 2 செல்போன்கள் பறிப்பு


வாலிபரை தாக்கி 2 செல்போன்கள் பறிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

சங்கராபுரம் அருகே வாலிபரை தாக்கி 2 செல்போன்கள் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள ரோடுபரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர் மகன் ஷம்சுதீன்(வயது 30). கட்டிடம் கட்டி விற்பனை செய்து வரும் இவர் சம்பவத்தன்று மாலை வடசேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது போன் வந்தது. இதையடுத்து மேலேரி தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஷம்சுதீன் போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷம்சுதீனின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் கிழித்து விட்டு அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சம்சுதீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து ஷம்சுதீனை தாக்கி அவரது செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றார்.


Next Story