வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x

வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதியை அடுத்துள்ள பாம்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபாலன் மகன் அன்புராஜ் (வயது 30). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சின்ன சிந்தலப்பன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் பாம்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அன்புராஜ் சென்றுள்ளார். அப்போது சின்ன சிந்தலப்பன், அவரது சகோதரர் பெரிய சிந்தலப்பன், சுந்தரராஜ் ஆகியோர் வந்து அன்புராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த அன்புராஜ் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.


1 More update

Next Story