கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்

கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார்.
மணப்பாறை:
மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஒரு கிணற்றில் நேற்று வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக மணப்பாறை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 30 முதல் 35 வயது இருக்கலாம். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





