கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் அயன்சிங்கம்பட்டி ஆலடித்தெருவை சேர்ந்த முத்து (வயது 36) என்பவரை கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஒரு மாதமாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து கல்லிடைக்குறிச்சி போலீசார் முத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





