சோளக்காட்டில் உடல் எரிந்து பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது


சோளக்காட்டில் உடல் எரிந்து பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது
x

சோளக்காட்டில் உடல் எரிந்து பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் டாஸ்மாக் கடையின் அருகே சோளக்காட்டில் கடந்த 21-ந்தேதி வாலிபர் ஒருவர் உடல் எரிந்து கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவரை யாரேனும் கொலை செய்து எரித்து விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியை சேர்ந்த செல்லமுத்து மகன் ராஜா (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story