கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு


கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு
x

செண்பகராமன்புதூரில் சாஸ்தா கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

செண்பகராமன்புதூரில் தனியார் பாலிடெக்கனிக்கல்லூரி பின்புறம் குதிரைபந்திவிளை ஏழுமுகம் கொண்ட சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் செண்பகராமன்புதூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தலைவராக உள்ளார். நேற்று காலை 6 மணிக்கு அவர் கோவிலிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த வெள்ளி கண்மலர், மாலை, வாள், கீரிடம் மற்றும் விளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் என கூறப்படுகிறது. இரவில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி சப் -இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story