திருடியவர் கைது


திருடியவர் கைது
x

இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி தபால்-தந்தி காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 49). சென்டிரிங் காண்டிராக்டராக உள்ளார். இவர் முத்தையாபுரம்- துறைமுகம் ரோட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி செய்து வருகிறார். கடந்த மாதம் 10- ந்தேதி சூசை நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கிழக்கே தரைப்பாலம் சென்டிரிங் அடித்து கான்கிரீட் போட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தரைப்பாலத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தரைப்பாலத்தில் சென்டிரிங் போடுவதற்காக பயன்படுத்திய இரும்பு பொருட்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த சிவலிங்கத்தை கைது செய்தார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story