திருடிய வாலிபர் கைது


திருடிய வாலிபர் கைது
x

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காரில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலி

நெல்லை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ. காலனியை சேர்ந்தவர் சங்கரன் (வயது 52). இவர் நேற்று முன்தினம் தனது காரை நெல்லை புதிய பஸ் நிலையம் பூங்கா அருகே நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் சங்கரனிடம் பேச்சு கொடுப்பதுபோல் பேசி காரில் இருந்த ஒரு பையை திருடிச் சென்றார். அந்த பையில் ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இதுகுறித்து சங்கரன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜாசெல்வின் (25) என்பவர் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story