வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் மகன் நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திசையன்விளை போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, நாகலிங்கத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.

1 More update

Next Story