திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை சி.என்.கிராமம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரின் மகன் சுப்பிரமணி (வயது 34). கூலி தொழிலாளி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்தனர். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை மேலப்பாளையம் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





