2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை:

கூடங்குளம் அருகே உள்ள காடுதுலா வடக்கு தெருவை சேர்ந்த ராசையா மகன் முருகன் (வயது 36). இவர் அடிதடி, கொலைமுயற்சி ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திய வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (55). இவரை நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீசார், 2 பேரும் அடைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தனர்.

1 More update

Next Story