கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான  5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொலை வழக்கு

தூத்துக்குடி எஸ்.எஸ்.மூர்த்தி தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் பிரபு (வயது 41) என்பவர் கடந்த 6.5.22 அன்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் சூப்பி என்ற செல்வசதீஷ் (23), வண்ணார் தெருவைச் சேர்ந்த 19 வயது வாலிபர், தாமோதர நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா என்ற சொரி (21), சத்யா நகரை சேர்ந்த கண்ணன் மகன் சீனு (22) மற்றும் மேலசண்முகபுரத்தைச் 19 வயது வாலிபர் ஆகியோரை தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வசதீஷ், இசக்கிராஜா, சீனு உள்பட 5 பேரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் உள்பட 106 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story