கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது


கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது.

தர்மபுரி

பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயி. இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்திருந்தார். இவர் நேற்று கரும்பை அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றி ஆலைக்கு அனுப்பி வைத்தார். டிராக்டரை புலிகரை பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.

கடமடை அருகே வந்தபோது கரும்பு பாரத்துடன் டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கரும்புகள் சாலையில் சிதறி கிடந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் சாலையில் விழுந்த கரும்பை லாரியில் ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story