கார் மீது மோதிவிட்டு பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது


கார் மீது மோதிவிட்டு பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது
x

கார் மீது மோதிவிட்டு பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் திருமுருக்கு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது சரக்கு லாரி மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேரும், காரில் வந்த 2 பேரும் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சரக்கு லாரியில் கர்நாடக மாநிலத்திலிருந்து வேலி கற்கள் ஏற்றப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story