15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
x

15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் இருந்து சான்றோர்குப்பம் பகுதி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக பெய்த மழையால் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் நிரம்பி காணப்பட்டது.

இந்த நிலையில் ஓசூரில் இருந்து சென்னை நோக்கி கிரானைட் கல் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று கன்னிகாபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் பணிக்காக தோண்டப்பட்டு இருந்த சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை ஒட்டி வந்த பாண்டி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்துக்குள்ளான லாரி கடும் போராட்டத்துக்கு பிறகு பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.


Next Story