உழவர் சந்தைகளில் 117 டன் காய்கறி விற்பனை


தினத்தந்தி 24 Oct 2023 10:14 AM GMT (Updated: 24 Oct 2023 1:07 PM GMT)

உழவர் சந்தைகளில் 117 டன் காய்கறி விற்பனை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் ஆயுதபூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது. முதலில் பூசணிக்காய், பின்னர் பூ, பழம், காய்கள் வரத்து அதிகரித்தது. கடந்த 20-ந் தேதி முதல் வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறி விளைச்சல் அதிகரிப்பால் சந்தைகளில் காய்கறி வரத்தும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக விற்பனை சூடுபிடித்தது. கடந்த 22-ந் தேதி வடக்கு உழவர் சந்தை வரத்து 31 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 86 டன்னும் விற்பனைக்கு வந்தது. வழக்கமாக வடக்கு உழவர் சந்தையில் 24 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 75 டன்னும் விற்பனைக்கு வரும். காய்கறி வரத்து அதிகமாக இருந்தபோதிலும் விற்பனையும் அதிகரித்தது. காய்கறிகளின் விலையும் உயரவில்லை. கடந்த வார விலையே தொடர்ந்தது.

-----------


Next Story