தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்தது

தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள குறும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னழகு. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது அந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழை காரணமாக வீட்டின் ஒரு பக்க சுவர் சேதமடைந்து நேற்று அதிகாலையில் வெளி பக்கமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டை நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னழகு கோரிக்கை வைத்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





