சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
x

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை

திமிரி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் தோப்பில் வசித்து வந்தவர் சேட்டு (வயது 60). செங்கல் சூளை கூலி தொழிலாளியான அவர், நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பெய்த கனமழையால் திடீரென வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேட்டு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், ஏட்டு சிலம்பரசன் ஆகியோர் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் தாசில்தார் வசந்தி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story