சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி


சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
x

கோட்டூர் அருகே பலத்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

கோட்டூர்;

கோட்டூர் அருகே பலத்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

பலத்த மழை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் குலமாணிக்கம் ஊராட்சி நடுவகளப்பால் கிராமம் தோப்பு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 73). இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.பன்னீர்செல்வத்தின் மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். கோட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பன்னீர்செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் படுத்து இருந்தார்.

சுவர் இடிந்து விழுந்து சாவு

அப்போது மழை நீரில் நனைந்திருந்த அவரது வீட்டின் சுவர் இடிந்து பன்னீர்செல்வம் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து களப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலத்தமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story