பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

நீர்வரத்து குறைந்தது

ஈரோடு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்த காரணத்தால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,058 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக இருந்தது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 411 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 82.67 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Related Tags :
Next Story