சூடம் கொளுத்திய போது தீப்பிடித்து பெண் சாவு

தூத்துக்குடி அருகே சூடம் கொளுத்திய போது தீப்பிடித்து பெண் இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகள் முத்துபிரியதர்ஷினி (வயது 21). சம்பவத்தன்று இவர் வீட்டில் பூஜைக்காக சூடம் கொளுத்தினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துபிரியதர்ஷினி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





