விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

கபிஸ்தலம்

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 40). இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அஞ்சம்மாள் சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சம்மாள் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, குமரவேல் கொடுத்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.









Next Story