கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x

கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தாா்.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே உள்ள அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மேனகா (வயது 44). இவருடைய கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மேனகா தன்னுடைய மகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மேனகா உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கட்டிலில் அவர் படுத்து தூங்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பேச்சு மூச்சு இல்லாமல் மேனகா கிடந்துள்ளார். இதனால் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story