விபத்தில் காயமடைந்த பெண் சாவு


விபத்தில் காயமடைந்த பெண் சாவு
x

விபத்தில் காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

தர்மபுரியை சேர்ந்தவர்கள் ஒரு காரில் நாங்குநேரி பகுதியில் கடந்த 20-ந் தேதி சென்று கொண்டு இருந்தனர். நாங்குநேரி அருகே வந்தபோது கார் திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் சரஸ்வதி (வயது 67) என்பவர் காயமடைந்து நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story