விபத்தில் படுகாயமடைந்த பெண் சாவு


விபத்தில் படுகாயமடைந்த பெண் சாவு
x

விபத்தில் படுகாயமடைந்த பெண் இறந்தார்.

திருச்சி

திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 49), பால் வியாபாரி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (44). இவர்கள் 2 பேரும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டியம் அருகே உள்ள அப்பணநல்லூரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு அதே காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நாமக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாத்தலை போலீஸ் நிலையம் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே நாமக்கல் நோக்கி வந்த லாரி காரின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story