காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்


காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்
x

காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்துக்கொன்ற பெண், உடலை பாலத்தின் அடியில் புதைத்தார்.

கருத்து வேறுபாடு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கீழ்மாந்தூரைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் பாரதி(வயது 35). இவர், சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(27). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாரதிக்கும், அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

போலீசில் புகார்

இந்த நிலையில் தனது கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்காக கடந்த மாதம் ஊருக்கு சென்றார். இந்தநிலையில், 24-ந் தேதியில் இருந்து வீட்டில் இருந்த பாரதியை காணவில்லை என அவரது உறவினர் செல்வமணி, திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை தேடி வந்தனர். இந்த நிலையில் திவ்யாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், திவ்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டதாக திவ்யா அதிர்ச்சி தகவலை கூறினார். போலீசாரிடம் அவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

கள்ளக்காதல்

எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் சென்னையில் வேலை பார்த்து வந்தாலும் போனில் பேசும்போது எல்லாம் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். இந்த நிலையில் கீழ்மாந்தூர் ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார்(38) என்பவருடன் கள்ளக்காதல் உண்டானது. நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி, பழகி வந்தோம். கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக எனது கணவர் பாரதி ஊருக்கு வந்தார்.

கழுத்தை நெரித்து கொன்றோம்

வழக்கம்போல் எங்களுக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதனால் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தேன். இதனையடுத்து எனது திட்டத்தை சதீஷ்குமாரிடம் தெரிவித்தேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த பாரதியை நானும், சதீஷ்குமாரும் சேர்ந்து அடித்து கழுத்தை நெரித்து கொன்றோம். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவது என்று முடிவு செய்தோம்.

பாலத்தின் அடியில் உடலை புதைத்தோம்

இதனையடுத்து பாரதியின் உடலை ஒரு சரக்கு வேனில் ஏற்றி திருப்பனந்தாள் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். பின்னர் என்மீது யாருக்கும் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க அனைவரிடமும் சகஜமாக பேசி வந்தேன்.

இவ்வாறு திவ்யா போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார், கணவரை கொன்ற திவ்யா மற்றும் அவரது காதலன் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story