மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x

திருப்பத்தூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள புங்க மரத்தின் மீது ஏறி கிளையை வெட்டிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள மருத்துவமனையிலும், பின்னர் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story