கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:46 PM GMT)

மேல்மலையனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

மேல்மலையனூர் செப்.11-

மேல்மலையனூர் அருகே கோ.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அய்யப்பன் (வயது 40) தொழிலாளி. இவர் கோவில்புரையூர் கிராமத்தில் தஞ்சான் என்பவருடைய கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் வேலை முடிந்ததும் கிணற்றிலிருந்து கயிறு மூலம் மேலே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அய்யப்பன் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அய்யப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story