கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

ஆற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு மாசா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலி தொழிலாளியான இவர் சென்னையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஆற்காட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மாசாபேட்டை கே.கே.நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சங்கர் தவறி விழுந்ததாக வீட்டுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து சங்கரை பிணமாக மீட்டனர். ஆற்காடு டவுன் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story