ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி சாவு


ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி சாவு
x

ஆம்பூர் அருகே ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி சாவு

திருப்பத்தூர்

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45), கூலித்தொழிலாளி.

இவர் இன்று காலை திடீரென ரத்த வாந்தி எடுத்தார். அதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை, மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனை பிணவறையில் ைவத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story