விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 Aug 2023 7:00 PM GMT (Updated: 26 Aug 2023 7:00 PM GMT)

விபத்தில் தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விருதுநகர் மாவட்டம் சிவனணைந்தபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30). இவர் கோவில்பட்டியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். கோவில்பட்டி ெரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் பலத்த காயம் அடைந்த பாண்டித்துரைக்கு கோவில்பட்டி அரசு மற்றும ்தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ெநல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story