விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Sep 2023 7:00 PM GMT (Updated: 2 Sep 2023 7:00 PM GMT)

ஆலங்குளம் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கீழக்காட்டூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் தனியார் பீடி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

மோட்டார் சைக்கிளில் முருகன் பூலாங்குளம் - நெல்லையப்பபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஆண்டிப்பட்டியிலிருந்து- மாதாபுரத்தில் உள்ள செங்கல் சூளைக்கு விறகு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டன. இதில் முருகன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த சக்திவேல் மகன் சஜின் (26) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story